ராணுவ அதிகாரி சோபியா குரேஷி குறித்து சர்ச்சை பேச்சு; உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட பாஜக எம்.பி.

6 hours ago 3

ராணுவ அதிகாரி சோபியா குரேஷி குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கிற்கு எதிராக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. குன்வார் விஜய் ஷா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். பாகிஸ்தானுக்கு அவர்களது சசோதரியை வைத்தே பதிலடி கொடுத்ததாக சோபியா குரேஷி குறித்து பாஜக எம்.பி. சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்றம் தாமே முன்வந்து விசாரித்து பாஜக எம்.பி மீது வழக்கு பதிய உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, பாஜக எம்.பி. குன்வார் விஜய் ஷா சர்ச்சை பேச்சுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். “நாளை நான் உயிருடன் இருப்பேனா என்றுத் தெரியாது; 4 மணிநேரம் தருகிறேன்; எம்.பி. விஜய் ஷா மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யுங்கள்; ஒன்று, இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கட்டும், இல்லையேல் நாளைக்குள் வழக்குப் பதிய வேண்டும். பஹல்காமில் நமது மகள்களின் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சகோதரியை வைத்தே பாடம் கற்பித்துள்ளோம்” என மத்திய பிரதேச பாஜக எம்.பி. விஜய் ஷா பேசியிருந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதிகள் ஆவேசமாக பேசியுள்ளனர்.

 

The post ராணுவ அதிகாரி சோபியா குரேஷி குறித்து சர்ச்சை பேச்சு; உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட பாஜக எம்.பி. appeared first on Dinakaran.

Read Entire Article