ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட்டில் அமையும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி!!

2 weeks ago 3

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட்டில் அமையும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. டாடா நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழ்நாடு மற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம். டாடா கார் ஆலைக்கு கடந்த செப்டம்பர் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பணப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 9,000 கோடி முதலீடு செய்கிறது. ராணிப்பேட்டையில் முதல் கட்டமாக டாடா நிறுவனம் ரூ.914 கோடியில் தொழிற்சாலை அமைக்க உள்ளது.

190 ஹெக்டேரில் அமையும் கார் உற்பத்தி ஆலையால் முதல் கட்டமாக 1,650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான கட்டுமான பணி 15 மாதங்கள் முடிவடையும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆலையில் ஆண்டு உற்பத்தி திறன் 2.5 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் இருக்கும் என்றும், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் உற்பத்தி இலக்கும் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஆலை அடுத்த தலைமுறை சொகுசு பிரீமிம் கார்கள் மற்றும் புதிய மின்சார வாகனங்களின் உற்பத்திக்கான மையமாக செயல்படும் என்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

The post ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட்டில் அமையும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி!! appeared first on Dinakaran.

Read Entire Article