வேலூர், பிப்.6: ஆந்திர மாநிலத்துக்கு ரயிலில் கடத்த முயன்ற 150 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். காட்பாடி ரயில்வே போலீஸ் எஸ்எஸ்ஐ பத்மராஜா தலைமையிலான ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து காட்பாடி வழியாக பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது 150 கிலோ எடை கொண்ட அரிசி சிப்பங்களுடன் இருந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் சோளிங்கர் அடுத்த பாணாவரத்தை சேர்ந்த முனிசாமி(35) என்பது தெரிய வந்தது. அரிசியை ஆந்திர மாநிலம் குப்பத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக ரயில்வே போலீசார் முனிசாமியை கைது செய்து அவரிடம் இருந்து 150 கிலோ அரிசியை கைப்பற்றி சிவில் சப்ளைஸ் குடோனில் ஒப்படைத்தனர்.‘
The post ரயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.