நாக்பூர்: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி நாக்பூரில் கடந்த பிப். 26 முதல் நடந்து வருகிறது. முதலில் களமிறங்கிய விதர்பா அணி 379 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் கேரளா முதல் இன்னிங்சில் 342 ரன் எடுத்தது. அதைத் தொடர்ந்து 4ம் நாளான நேற்று விதர்பா அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர்கள் பார்த் ரெக்காடே 1, துருவ் ஷோரி 5 ரன்னில் வீழ்ந்தனர். டேனிஸ் மலேவர் 73 ரன் குவித்தார்.
கருண் நாயர் அதிரடியாக ஆடி சதம் விளாசினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் விதர்பா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 249 ரன் எடுத்திருந்தது. கருண் நாயர் 132 ரன், கேப்டன் அக்சய் வாத்கர் 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். ஆட்டத்தின் கடைசி நாளாக இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளதால் போட்டி டிரா ஆக வாய்ப்புகள் அதிகம்.
The post ரஞ்சி இறுதிப்போட்டி விதர்பா ரன் குவிப்பு appeared first on Dinakaran.