“யாருடைய காலிலும் விழக்கூடாது” - தவெக தொண்டர்களுக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் வேண்டுகோள்

4 months ago 26

சேலம்: “நீங்கள் அனைவரும் தாய் - தந்தை கால்களில் மட்டும்தான் விழ வேண்டும். வேறு யாருடைய காலிலும், நீங்கள் விழக்கூடாது. இனிவரும் காலங்களில் நமது கட்சியினர் இதை பின்தொடர வேண்டும்” என்று ஆத்தூரில் நடைபெற்று வரும் தவெக முதல் மாநில மாநாட்டுக்கான அரசியல் பயிலரங்க கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கூறியுள்ளார் .

தவெக முதல் மாநில மாநாட்டு குழுக்கள் மற்றும் தற்காலிக தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான அரசியல் பயிலரங்கம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (அக்.18) நடைபெற்றது. இதில் வரவேற்பு உரையாற்றிய, அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் பேசியதாவது: அடுத்த வாரம், தவெக-வின் வெற்றி மாநாட்டில், தலைவர் விஜய் உங்களைச் சந்திக்கவிருக்கிறார். இன்று தவெகவின் அரசியல் பயிலரங்கம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக, சிறப்பு அழைப்பாளர்கள் பலர் வந்துள்ளனர். தலைவரின் உத்தரவுக்கிணங்க, நாம் அனைவரும் இங்கு குழுமி இருக்கிறோம்.

Read Entire Article