யானை வேட்டை விவகாரத்தில் கைதாகி தப்பிய இளைஞர் மர்ம மரணம்: வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு

1 month ago 13

தருமபுரி/சென்னை: தருமபுரி மாவட்டம் ஏமனூர் காப்புக் காட்டில் யானை வேட்டை தொடர்பாக கைதாகி தப்பிச்சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட வனப்பகுதியில் பென்னாகரம் நீதிபதி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இதனிடையே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனச்சரகம் ஏமனூர் காப்புக்காடு பகுதியில் கடந்த பிப்.27-ம் தேதி ஆண் யானை ஒன்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் மார்ச் 17-ம் தேதி 2 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

Read Entire Article