மோசமான வானிலை: சீமான் பயணித்த விமானம் 20 நிமிடங்கள் வட்டமடித்ததால் பரபரப்பு 

5 months ago 17

மதுரை: மதுரையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக சீமான் வந்த விமானம் தரையிறங்க முடியாமல் சுமார் 20 நிமிடங்கள் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, மதுரையில் நேற்று இரவில் இருந்தே மழை பெய்யத் தொடங்கியது. மாலையிலும் மழை நீடித்தது. இதனால் மதுரை விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவியது. சென்னை - மதுரை விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

Read Entire Article