மோசமான வானிலை 274 பயணிகளுடன் துபாய் விமானம் சென்னையில் தரையிறங்கியது

2 weeks ago 2

சென்னை: மோசமான வானிலையால் கொல்கத்தா சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தரையிறங்க முடியாமல் சென்னையில் தரை இறங்கியது. துபாயிலிருந்து நேற்று காலை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கொல்கத்தா சென்றது. அப்போது, அங்கு கடுமையான பணி மூட்டத்துடன் மோசமான வானிலை நிலவியதால் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்த விமானத்தை சென்னைக்கு திருப்பி அனுப்பினர். இதையடுத்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 274 பயணிகளுடன் நேற்று காலை 10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டனர். பயணிகளுக்கு குடிநீர் சிற்றுண்டி போன்றவைகள் விமானத்துக்குள்ளையே வழங்கப்பட்டன. கொல்கத்தாவில் வானிலை சீரடைந்த பின்பு, விமானம் சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

The post மோசமான வானிலை 274 பயணிகளுடன் துபாய் விமானம் சென்னையில் தரையிறங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article