நி​தியும் கிடையாது, நீதியும் இல்லை; தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு: முதல்வர் குற்றச்சாட்டு

3 hours ago 1

திருநெல்​வேலி: நிதி​யும் கிடை​யாது, நீதி​யும் இல்லை என்று மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்​பதாக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் கூறினார்.

நெல்​லை​யில் நேற்று நடைபெற்ற அரசு விழா​வில் ரூ.8,772 கோடி மதிப்​பிலான முடிவுற்ற திட்​டங்கள் மற்றும் புதிய திட்​டங்​களைத் தொடங்கி​வைத்​தும், பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவிகளை வழங்​கி​யும் முதல்வர் பேசி​ய​தாவது: 2023-ல் நெல்லை, தென்​காசி, குமரி, தூத்​துக்​குடி மாவட்​டங்​களில் கனமழை​யால் ஏற்பட்ட கடும் பாதிப்பு​களில் இருந்து மீள்​வதற்கு மத்திய அரசிடம் நிதி கேட்​டோம். ஆனால், இடைக்கால நிதி​யுதவியைக் கூட வழங்​க​வில்லை. நீதி​மன்​றத்தை நாடிய பின்னரே ரூ.276 கோடி மட்டும் வழங்​கினர். தமிழகம் கேட்ட ரூ.37,904 கோடி​யில் ஒரு சதவீதத்​தைக் கூட மத்திய அரசு கொடுக்க​வில்லை. ஆனாலும், மாநில அரசின் நிதி​யில் பணிகளை மேற்​கொண்​டோம்.

Read Entire Article