ஜோலார்பேட்டை / சென்னை: ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெமினி (41). இவரது மனைவி ரேவதி (36). தையல் கலைஞர்களான இவர்கள், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், திருப்பூரிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளனர். தற்போது ரேவதி கர்ப்பிணியாக உள்ளார்.