மொழி உள்பட பல்வேறு பாகுபாடுகளால் நாட்டை பிளவுபடுத்தும் பாஜவை நடிகர் விஜய் ஏன் விமர்சிக்கவில்லை: மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

3 months ago 14

சென்னை: நாட்டை பிளவுபடுத்தும் ஒன்றிய பாஜவை தனது மாநாட்டில் நடிகர் விஜய் ஏன் விமர்சிக்கவில்லை என்பதே மிகப்பெரிய கேள்வி என மமக தலைவர் ஜவாஹிருல்லா கூறினார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கி விடுவோம் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசி உள்ளார்.

தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள அர்ஜுன் சம்பத் மீது தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழி உள்பட பல்வேறு பாகுபாடுகளால் நாட்டை பிளவுபடுத்தும் பாஜவை ஏன் விஜய் விமர்சிக்கவில்லை என்பது மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது.

The post மொழி உள்பட பல்வேறு பாகுபாடுகளால் நாட்டை பிளவுபடுத்தும் பாஜவை நடிகர் விஜய் ஏன் விமர்சிக்கவில்லை: மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article