நாகர்கோவில்: சுசீந்திரம் அருகே உள்ள மேல புல்லுவிளையில் பெருமாள்சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் நின்ற பெரிய சந்தன மரத்தை மர்ம நபர்கள் சிலர் வெட்டி கடத்தி சென்றனர். இந்த காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. 3 பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஊர் நிர்வாகிகள், சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக புகார் மனுவும் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post மேல புல்லுவிளை கோயில் வளாகத்தில் நின்ற சந்தன மரம் வெட்டி கடத்தல் appeared first on Dinakaran.