மேயர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் - அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்

5 months ago 14

சென்னை,

மேயர் மேம்பாட்டு நிதியின் கீழ், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட புதிய வாழைமா நகர், 5-வது தெருவில் ரூ.93.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்தை, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு இன்று (09.11.2024) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, 74-வது வார்டு மாமன்ற உறுப்பினரின் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட ஏகாங்கிபுரத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டிடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, அதில் குழந்தைகள் மையத்தினை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில், மேயர் பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Read Entire Article