மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை: பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்வு 

4 months ago 18

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் பில்லூர் அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 9 அடி உயர்ந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரப் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சியின் 33-வது வார்டு நடூர் முனியப்பன் கோயில் வீதியில் இடியும் நிலையில் இருந்த பயன்படுத்தப்படாத வீட்டுக் கட்டிடம் தொடர் மழையால் தாக்குப்பிடிக்க முடியாமல் இன்று (நவ.3) அதிகாலை இடிந்து விழுந்தது. அப்பகுதியில் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவங்கள் தடுக்கப்பட்டன. அதேபோல், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக, மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் வனப்பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணை உள்ளது.

Read Entire Article