தமிழக பட்ஜெட் 2025: அரசு ஊழியர்களின் அதிருப்தியும், மக்கள் வரவேற்கும் அம்சங்களும்!

3 hours ago 2

மதுரை: தமிழக அரசு சட்டப்பேரவையில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நோக்கோடு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட் சமூக நீதிக்கு எதிரானது என அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேவேளையில், இந்த பட்ஜெட்டுக்கு பெண்களிடம் வரவேற்பும் நிலவுகிறது.

மதுரை எம்பி சு.வெங்கடேசன்: மதுரை மக்களின் நீண்டகால கோரிக்கைகள் பலவற்றை தமிழக நிதிநிலை அறிக்கை நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக, மதுரையை பண்பாடு, தொழில் வளர்ச்சி, அடிக்கட்டமைப்பு மேம்பாடு, அடுத்த கட்ட தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் நலன் என்கிற ஐந்து மைய அச்சுகளையும் இணைத்து சிந்தித்த 17 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Read Entire Article