உடன்குடி,ஜன.8: மெஞ்ஞானபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மெஞ்ஞானபுரம் மெயின் பஜாரில் நடந்த இந்நிகழ்ச்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் அனிஸ்ஸ்டெபி தலைமை வகித்தார். முன்னிலை வகித்த வியபாரிகள் சங்கத் தலைவர் ராஜாபிரபு, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கலைத் துவக்கி வைத்தார். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேது குற்றாலம், சுகாதார ஆய்வாளர்கள் ஜோபின், ராஜகுமார், ரஞ்சத், சித்தா மருந்தாளுநர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post மெஞ்ஞானபுரத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கல் appeared first on Dinakaran.