முழு கொள்ளளவை எட்டிய பார்சன்ஸ் வேலி அணை: கோடையில் உதகை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது! 

2 hours ago 1

உதகை: உதகையில் வசிக்கும் மக்களின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ் வேலி அணை முழுக் கொள்ளளவை எட்டி உள்ளதால், கோடை சீசன் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.

நீலகிரி மாவட்டம் உதகை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரம் புனல் மின் உற்பத்திக்கு பயன்படும் பார்சன்ஸ் வேலி அணை. மேலும், மார்லிமந்து, டைகர் ஹில், கோரிசோலை, தொட்டபெட்டா மேல்/கீழ், கோடப்பமந்து மேல்/கீழ், ஓல்டு ஊட்டி மற்றும் கிளன் ராக் ஆகிய நீர்த்தேக்கங்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்றன. நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ் வேலி நீர்த்தேக்கம் மொத்தம் 56 அடி கொள்ளளவை எட்டியுள்ளது.

Read Entire Article