முல்லை பெரியாறு பிரச்சினையில் ‘எல்லை தாண்டும்’ கேரளா - களத்துக்கு வராத தமிழக கட்சிகள்

1 week ago 5

குமுளி: முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் நிர்ணயிக்கப்பட்ட எல்லையை கடந்து கேரள அமைப்பினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக விவசாயிகளே தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக கட்சிகள் இப்பிரச்சினையை கண்டுகொள்ளாமலேயே இருக்கின்றன.

முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கப்பட்ட நிலையில் 1979-ம் ஆண்டு அணை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக கேரளாவில் வதந்தி பரவியது. ஆகவே அணையின் உச்ச அளவு நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு மாநிலங்களுக்கும் அணை தொடர்பான சர்ச்சை தொடங்கியது. பல்வேறு போராட்டங்கள், பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. உச்ச நிகழ்வாக 2011-ம் ஆண்டு தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையில் பெரும் போராட்டம் தொடங்கியது. இதில் கேரளாவுக்கான போக்குவரத்தை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.

Read Entire Article