முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா: ஒரு எலுமிச்சை பழம் ரூ.20 ஆயிரத்துக்கு ஏலம்

1 week ago 5

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள ரத்தினவேல்முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் 9 நாள் விழாவின்போது ஒவ்வொரு நாளும் இரட்டை குன்றின் மீது அமைந்துள்ள முருகன் கோவில் அருகில் உள்ள வேல் மீது ஒவ்வொரு எலுமிச்சை பழத்தை சொருகுவார்கள்.

பின்னர் அந்த பழங்கள் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டது. 11-ம் நாள் விழாவான நேற்று முன்தினம் இடும்பன் சாமிக்கு கருவாடு சோறு படையல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்கள் முன்னிலையில் மரசெருப்பின் மீது நாட்டாமை புருஷோத்தமன் நின்றுகொண்டு 9 நாள் எலுமிச்சை பழத்தையும் ஏலம் விட்டார். இந்த எலுமிச்சை பழத்தை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பதால் பக்தர்கள் போட்டிப்போட்டு எலுமிச்சை பழத்தை வாங்க ஏலம் கேட்டனர்.

இதில் முதல் நாள் பழம் ரூ.20 ஆயிரத்துக்கும், 2-ம் நாள் பழம் ரூ.3,600-க்கும், 3-ம் நாள் பழம் ரூ.1,400-க்கும், 4-ம் நாள் பழம் ரூ.1,100-க்கும், 5-ம் நாள் பழம் ரூ.1,300-க்கும், 6-ம் நாள் பழம் ரூ.700-க்கும், 7-ம் நாள் பழம் ரூ.1,500-க்கும், 8-ம்நாள் பழம் ரூ,1,100-க்கும், 9-ம்நாள் பழம் ரூ.1700-க்கும் ஏலம் போனது. ஏலம் எடுத்தவர்களுக்கு எலும்பிச்சை பழத்துடன் ஒரு உருண்டை கருவாடு சாதம் வழங்கப்பட்டது.

 

Read Entire Article