
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாங்காக்கில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு பயணி தனது உடமைகளில் மறைத்து கடத்தி வந்த 14 தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.6.3 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்கத்தை கடத்தி வந்த பயணியை கைது செய்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.