நாக்பூரில் நடந்த மற்றொரு அரையிறுதியில் மும்பை அணிக்கு எதிராக ஆடிய விதர்பா அணி 383 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய மும்பை முதல் இன்னிங்சில் மோசமாக ஆடி 270 ரன் சேர்த்து ஆல் அவுட்டானது. அந்த அணியின் துவக்க வீரர் ஆகாஷ் ஆனந்த் 106 ரன் குவித்தார். விதர்பா அணியின் யாஷ் தாக்குர், ஹர்ஷ் துாபே தலா 2, பார்த் ரெகாடே 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 3ம் நாளில் 2வது இன்னிங்சை துவக்கிய விதர்பா அணி நிதானமாக ஆடியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 53 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்திருந்தது. இதனால் அந்த அணி 260 ரன் முன்னிலை பெற்றுள்ளது. யாஷ் ரத்தோட் 59, ஆகாஷ் வாத்கர் 31 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இன்று 4ம் நாள் ஆட்டம் தொடர உள்ளது.
The post மும்பை மோசமான ஆட்டம்: விதர்பா 260 ரன் முன்னிலை appeared first on Dinakaran.