மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கத்தோடு இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் சரிந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73 புள்ளிகள் சரிந்து 74,030 புள்ளிகளானது. 230 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் நண்பகலில் 500 புள்ளி சரிந்த போதிலும் மீட்சி பெற்று 73 புள்ளி சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 18 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27 புள்ளிகள் சரிந்து 22,470 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73 புள்ளிகள் சரிவுடன் நிறைவு..!! appeared first on Dinakaran.