மும்பை அணிக்கு எதிரான தோல்வி..டெல்லி கேப்டன் கூறியது என்ன ?

5 hours ago 2

மும்பை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 73 ரன்கள் எடுத்தார்

இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி துவக்கமே தடுமாறியது. 18.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த டெல்லி அணி 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. டெல்லி அணி வெளியேறியது .

இந்த நிலையில் தோல்வி தொடர்பாக டெல்லி கேப்டன் பாப் டு பிளசிஸ் கூறியதாவது,

நாங்கள் களத்தில் சிறப்பாக விளையாடினோம்- வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது பேட்டிங் செய்ய எளிதான பிட்ச் அல்ல. கடைசி இரண்டு ஓவர்களில் நாங்கள் ஆட்டத்தை நழுவ விட்டோம். கடைசி இரண்டு ஓவர்களில் கிட்டத்தட்ட 50 ரன்கள் எடுக்க விட்டோம் . அக்சர் மற்றும் ஸ்டார்க் இல்லாதது இழப்பு .இந்த விக்கெட்டில் அக்சர் படேல் பந்து வீச விரும்புவார். ஆனால் அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். என தெரிவித்தார் .

Read Entire Article