முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவு

5 hours ago 2

புதுடெல்லி,

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கோடைகால சுற்றுலா தலம் காஷ்மீர். பாகிஸ்தான் நாட்டையொட்டி இருக்கும் இங்கு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தவே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில், சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால், உளவுத்துறை அதிகாரி மணீஷ் ரஞ்சன், கர்நாடகாவை சேர்ந்த பங்குச்சந்தை நிபுணர் மஞ்சுநாத் உள்பட 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். இது பயங்கரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதலாக கருதப்படுகிறது.

குறிப்பாக பயங்கரவாதிகள் ஒவ்வொருவரின் பெயரை கேட்டு, அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர் என அறிந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட அனைவரும் ஆண்களே. பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திய இடத்துக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று அங்கு ஹெலிகாப்டர், டிரோன் உதவியுடன் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்தநிலையில், பயங்கரவாத தாக்குதல் தொடர்பான நிலைமை குறித்து நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பாதுகாப்பு த்துறை ராஜ்நாத் சிங் ஆகியோர் அனைத்துக் கட்சிகளுடனும் பேச இருப்பதாக கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து முப்படைகளும் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பதிலடி தருவதற்கு இந்தியா தயாராக உள்ளது.

Read Entire Article