விருதுநகர், டிச.6: தமிழ்நாடு முதல்வர் இந்தாண்டு நடந்த சுதந்திர தின விழாவில் பொதுப்பெயர்(ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம்/டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் டிச.5ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பொதுமக்களின் நலன் கருதி டிச.10ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
The post முதல்வர் மருந்தகம் அமைக்க டிச.10 வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.