முதல்வர் நாளை அரியலூர் வருகை: கொல்லாபுரம் விழா அரங்க மேடை அமைப்பு

6 months ago 20

அரியலூர், நவ. 14: அரியலூர் மாவட்டத்திற்கு முதல்வர் வருகை தந்து பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கவுள்ள கொல்லாபுரம் விழா அரங்க மேடையை அமைச்சர் சா.சி .சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்டத்திற்கு நாளை வருகை தந்து, அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிடும் விழா நடைபெற உள்ளது. அதனையொட்டி விழா நடைபெறும் இடத்தையும் , அரங்கம் அமைக்கும் பணியினை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

The post முதல்வர் நாளை அரியலூர் வருகை: கொல்லாபுரம் விழா அரங்க மேடை அமைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article