சென்னை: முதன்முறையாக வீட்டிலிருந்து வெளியே வந்து, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார் நடிகர் விஜய். அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இந்நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வழக்கமாக தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளுக்கு பனையூரில் உள்ள அலுவலகத்தில் மரியாதை செலுத்தி வந்த விஜய், முதன்முறையாக வெளியில் வந்து மரியாதை செலுத்தி உள்ளார். காரில் இருந்து இறங்கியதும் நேராக சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவரது வருகை குறித்து மீடியாவுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.“
The post முதன்முறையாக வெளியே வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார் நடிகர் விஜய் appeared first on Dinakaran.