முகையூரில் சுங்கச்சாவடி - ஈசிஆரில் 4 வழிச்சாலை பணி 75% நிறைவு

4 hours ago 4

மாமல்லபுரம் - முகையூர் இடையேயான நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு 75 சதவித பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், முகையூர் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழிப்பாதையாக விரிவுபடுத்த மத்திய அரசு ரூ.24,435 கோடி நிதி ஒதுக்கியது. மேலும், நான்கு வழிப்பாதைக்கான பணிகள் 8 பிரிவுகளாக மேற்கொள்ளப்பட உள்ளது. முதற்கட்டமாக, மாமல்லபுரம் - முகையூர் பகுதிக்கு ரூ.707 கோடி. முகையூர் - மரக்காணம் பகுதிக்கு ரூ.792 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், மாமல்லபுரம் - முகையூர் பகுதி ஈசிஆர் சாலையை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேசிய நெடுஞ்சாலைத்துறை தொடங்கி மேற்கொண்டு வருகிறது. இதற்காக, ஈசிஆர் சாலையிலிருந்த நான்கு சுங்கச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன.

Read Entire Article