மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண முன்பதிவு சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடவுளுக்கே கல்யாணம் நடத்தும் ஊரான மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெறும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபோகத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கடவுளின் திருமணத்தை காட்சி பொருளாக்கும் விதமாக 200, 500 ரூபாய் என்று ஆன்லைனில் முன்பதிவு சிறப்பு கட்டணம் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்திருப்பதை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.