சென்னை : கடல் ஆமைகள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி,”மீனவர்களுக்கு ஆமையும், மீன்களும் 2 கண்கள் போல்,மீனவர்ளையும், கடல் ஆமைகளையும் பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விசைப் படகுகள் கடற்கரையில் இருந்து 5 நாடிகல் மைல் தூரம் வரை மீன் பிடிப்பது தவிர்க்க வேண்டும். தற்போது வரை 1,300 ஆமைகள் மரணம் அடைந்துள்ளது. விதிகளை மீறிய மீன் பிடித்த 208 மீனவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post மீனவர்ளையும், கடல் ஆமைகளையும் பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கை : அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.