மீனவர் பிரச்சனை பற்றி இலங்கை அரசிடம் பிரதமர் மோடி பேச வேண்டும்: டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

1 month ago 7

டெல்லி: இலங்கை செல்ல உள்ள பிரதமர் மோடி, மீனவர் பிரச்சனை குறித்து அந்நாட்டு அதிபரிடம் பேச வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது மக்களவையில் டி.ஆர்.பாலு பேசினார். தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என இலங்கை அதிபர் கூறினார், ஆனால் உண்மை நிலை வேறு மாதிரியாக உள்ளது. மீனவர்கள் விவகாரத்தில் ஒரு நிரந்தர தீர்வை எட்டும் வகையில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

The post மீனவர் பிரச்சனை பற்றி இலங்கை அரசிடம் பிரதமர் மோடி பேச வேண்டும்: டி.ஆர்.பாலு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article