‘மீண்டும் விரிவடையும் கோவை மாநகராட்சி எல்லை’- 16 உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க அரசுக்கு பரிந்துரை

6 months ago 44

கோவை: கோவை மாநகராட்சியின் எல்லை மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 16 உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைக்க மாவட்ட நிர்வாகம் வாயிலாக அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து, முக்கிய மாநகராட்சிகளில் ஒன்றாக கோவை மாநகராட்சி உள்ளது. 257.04 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோவை மாநகராட்சியில் தற்போது 100 வார்டுகள் உள்ளன. இவை நிர்வாக வசதிக்காக 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2006- 11 காலக்கட்டத்தில் கோவை மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கை 72 ஆக இருந்தது. தொடர்ந்து 2011ம் ஆண்டு 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 1 கிராம ஊராட்சி என 11 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டது.

Read Entire Article