மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல்.: பெங்களூரு - கொல்கத்தா போட்டி நடைபெறுவதில் சிக்கல்.. காரணம் என்ன..?

1 day ago 3

பெங்களூரு,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறிவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் ஏற்பட்ட போர்ப்பதற்றம் காரணமாக ஐ.பி.எல். தொடர் ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது இந்தியா- பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

புள்ளி பட்டியலில் 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விடும். மறுபுறம் நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா அணி 12 போட்டிகளில் விளையாடி வெறும் 11 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைக்க மீதமுள்ள 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். இதனால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதற்கான காரணம் என்னவெனில், பெங்களூருவில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழை நாளை வரை நீடிக்கும் என வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் இந்த ஆட்டம் தடையின்றி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. 

Read Entire Article