
சென்னை,
தமிழில் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', 'இனிமே இப்படித்தான்', 'நாகேஷ் திரையரங்கம்', 'கன்னித்தீவு' உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை ஆஷ்னா சவேரி.
தொடர்ந்து தமிழில் பெரிய அளவில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், திடீரென்று 5 ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். பின்னர் 'எம்.ஐ.3' என்ற படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடித்தார். தற்போது 2 ஆண்டுகளாக அவர் படங்கள் நடிக்கவில்லை.
இந்நிலையில், ஆஷ்னா சவேரி மீண்டும் தமிழில் படங்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2 கதைகளை அவர் கேட்டிருப்பதாகவும், அதில் ஒரு கதையை ஓகே செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.