“மிஸ்டுகாலில் 1 கோடி பேரை கட்சியில் சேர்த்தவர்கள்...” - பாஜக கையெழுத்து இயக்கம் மீது உதயநிதி விமர்சனம் 

1 week ago 3

திருவாரூர்: “குழந்தைகளிடம் கையெழுத்தே வாங்க கூடாது. நாங்களும் நீட் தேர்வுக்காக சுமார் 1 கோடி கையெழுத்து வாங்கினோம். அப்போது, பள்ளி மாணவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டு தான் நாங்கள் கையெழுத்து வாங்கினோம். ஏற்கெனவே மிஸ்டுகால் கொடுத்து 1 கோடி பேரை பாஜகவில் சேர்த்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான், மும்மொழிக் கொள்கைக்காக மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவதைப் பார்க்கிறோம்,” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 7) திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி கூறியது: “டெல்டா மாவட்டங்களுக்கு, 2023-ம் ஆண்டில் ஒருமுறை வந்தேன். 2024-ல் ஒருமுறை வந்தேன். தற்போது 2025-ல் மூன்றாவது ஆய்வு. நல்ல முறையில் அரசுத் திட்டப் பணிகள் செய்துள்ளனர்.

Read Entire Article