நைபிடா,
மியான்மர் நாட்டில், இந்தியாவின் மணிப்பூர் எல்லையையொட்டிய பகுதியில் நேற்று மாலை 6.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது.என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,22.83 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.95 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.முன்னதாக கடந்த மாதம் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.