மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி

7 hours ago 3

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கவுசாம்பி மாநிலத்தில் உள்ள அமுரா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி உள்பட 2 பெண்கள் நேற்று மதியம் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Read Entire Article