மின்சாரம் பாய்ந்ததில் அதிமுக கொடி கம்பத்திற்கு பெயின்ட் அடித்தவர் பலி: மற்றொரு சம்பவத்தில் ஒப்பந்த ஊழியர் பலி

2 weeks ago 4

தாம்பரம்: தாம்பரம் அருகே அதிமுக கொடி கம்பத்திற்கு பெயின்ட் அடித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் வாலிபர் பலியானார். தாம்பரம் சேலையூர் அடுத்த மப்பேடு, பாரதிதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் காமேஷ் (34). ஆட்டோ டிரைவர். இவரது தாய் கண்ணம்மாள். அதிமுக பகுதி பொறுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிதாசன், 5வது தெரு முனையில் வைக்கப்பட்டிருந்த அக்கட்சியின் பழைய கொடி கம்பத்தை சுத்தம் செய்து பெயின்ட் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்சார கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த சேலையூர் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீ செம்பியம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் மோகனச்சந்திரன் (42) மற்றும் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (47). தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்கள். கடந்த 10ம் தேதி மாலை எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை சர்மா நகர் மின்சார வாரிய அலுவலகம் முன்பு மோகனச்சந்திரன் மற்றும் மோகன் இருவரும் டிரில்லிங் மிஷினின் பள்ளம் தோண்டும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் மோகனச்சந்திரன் நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post மின்சாரம் பாய்ந்ததில் அதிமுக கொடி கம்பத்திற்கு பெயின்ட் அடித்தவர் பலி: மற்றொரு சம்பவத்தில் ஒப்பந்த ஊழியர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article