மாவட்டத்தில் பழுதடைந்த 60 பள்ளி கட்டிடங்கள் இடிக்க முடிவு

3 months ago 18

 

கோவை, அக். 19: கோவை மாவட்டத்தில் பருவமழை பெய்து வருகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் போன்றவைகளில் இடியும் நிலையில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை கண்டறிந்து அதனை உடனடியாக இடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, ஆலாந்துறை, சிறுமுகை, சுல்தான்பேட்டை, அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 60 அரசு பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பழுதடைந்த கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பருவமழை தீவிரம் அடைவதற்குள் இடியும் நிலையில் கண்டறியப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்கள் இடிக்க தேவையான பணிகள் மேற்கொண்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மாவட்டத்தில் பழுதடைந்த 60 பள்ளி கட்டிடங்கள் இடிக்க முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article