நெல்லை,நவ.28: நெல்லை மாவட்ட, மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் பங்கேற்று புகார் மனுக்களை காவல்துறை அதிகாரிகளிடம் வழங்கினர். நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் நடந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமிற்கு மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 13 மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
The post மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் appeared first on Dinakaran.