மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்

1 week ago 3

காஞ்சிபுரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடத்தப்படும் என்று மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, பிப்ரவரி மாதம் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (12ம் தேதி) மாலை 3 மணிக்கு, கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.

இம்முகாமில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறுமாறும், இம்முகாம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினை 044-2999 8040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம்.

The post மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article