மதுரை: மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட் கேட்டு வழக்கு தொடர்ந்த தூத்துக்குடி மாணவியை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழு பரிசோதித்து சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த நிவேதா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 2022-ல் தாக்கல் செய்த மனு: நான் மாற்றுத்திறனாளி. பிளஸ் 2 முடித்து நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். ஆனால் என்னை மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் பிரிவுக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. எனவே எனக்கு எம்பிபிஎஸ். மாற்றுத்திறனாளிகள் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர் என சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.