மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட் கேட்டு வழக்கு: தூத்துக்குடி மாணவியை பரிசோதிக்க ஐகோர்ட் உத்தரவு

2 hours ago 1

மதுரை: மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட் கேட்டு வழக்கு தொடர்ந்த தூத்துக்குடி மாணவியை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழு பரிசோதித்து சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த நிவேதா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 2022-ல் தாக்கல் செய்த மனு: நான் மாற்றுத்திறனாளி. பிளஸ் 2 முடித்து நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். ஆனால் என்னை மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் பிரிவுக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. எனவே எனக்கு எம்பிபிஎஸ். மாற்றுத்திறனாளிகள் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர் என சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Read Entire Article