ஊத்தங்கரை, பிப்.6: ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி மகா மாரியம்மன் கோயிலில், 15 கிடா வெட்டி பிரமாண்ட கறி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. படப்பள்ளி கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. படப்பள்ளி, பட்டகானூர், பெருமாள்குப்பம், சரட்டூர் ஆகிய கிராம மக்கள் ஒன்று கூடி, மகா மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்து பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து மாரியம்மனுக்கு 15 ஆடுகள் பலியிட்டு கறி விருந்து வைத்தனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கிடா விருந்து சாப்பிட்டனர்.
The post மாரியம்மன் கோயில் விழாவில் கிடா விருந்து appeared first on Dinakaran.