மாமல்லபுரம் அருகே குடிபோதையில் 75 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

2 months ago 9

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே குடி போதையில் 75 வயது மூதாட்டியிடம் பாலியலில் சீண்டலில் ஈடுபட முயன்ற வாலிபரை பாலியல் சீண்டல் மற்றும் வன்புணர்வு சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் மீனவர் குப்பம் நாகாத்தம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் மூதாட்டி சித்திரைவள்ளி (75). இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (40) என்பவர் குடிபோதையில் மூதாட்டி வசித்து வரும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சி செய்துள்ளார்.

அப்போது, மூதாட்டி கத்தி கூச்சல் போட்டுள்ளார். பின்னர், மாமியாரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த மருமகள் வள்ளி மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை பிடிக்க முயன்றனர். இதையடுத்து, அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். மேலும், இது குறித்து மாமியாருக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து வள்ளி மாமல்லபுரம் மாமல்லபுரம் மகளிர் காவல் புகார் அளித்தார். பின்னர், தேவனேரில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் வந்ததையடுத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி மற்றும் மகளிர் விரைந்து சென்று ஜெயக்குமாரை பிடித்து வந்து பாலியல் சீண்டல் மற்றும் வன்புணர்வு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

The post மாமல்லபுரம் அருகே குடிபோதையில் 75 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article