மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பால் ரத்து: அதிமுக கவுன்சிலருக்கு கேக் ஊட்டிய மேயர்

3 months ago 8

 

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நேற்று நகராட்சி மேயர் அறையில், மேயர் நாகரத்தினம் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இதையடுத்து மாமன்ற கூட்டம் துவங்குவதற்கு முன்பாக மேயர் வெட்டிய கேக்கை அனைத்து கவுன்சிலருக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கி வந்தார். அப்போது, அதிமுக கவுன்சிலர் நிர்மலா தேவிக்கு மட்டும் கேக்கினை மேயர் நாகரத்தினம் ஊட்டி விட்டார். தொடா்ந்து அனைத்து அதிமுக கவுன்சிலருக்கும் கேக் வழங்கப்பட்டது.

கேக் சாப்பிட்ட சில நிமிடத்தில், கூட்டம் துவங்க காலதாமதம் ஆகி விட்டது நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளியேறினர். அப்போது, திமுக கவுன்சிலர் அதிமுக கவுன்சிலர்களை டீ சாப்பிட்டு போங்க என கூறினார். ஆனால், டீ வேண்டாம் என கூறி அதிமுக கவுன்சிலர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பால் ரத்து: அதிமுக கவுன்சிலருக்கு கேக் ஊட்டிய மேயர் appeared first on Dinakaran.

Read Entire Article