மானூர்,ஜன.5: மானூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமையன்பட்டி அருகே சந்தேகத்திற்கிடமான நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மானூர் அருகேயுள்ள கட்டப்புளியைச் சேர்ந்த சொள்ளமுத்து மகன் சுடலை (23) என்பதும், அவர் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து சுடலையை கைது செய்தனர்.
The post மானூர் அருகே கஞ்சா விற்றவர் கைது appeared first on Dinakaran.