புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கடந்த மாதம் 6ம் தேதி மாநிலங்களவை உணவு இடைவேளைக்குப் பிறகு கூடிய போது காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வியின் இருக்கையில் 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. இதனால் அமளி ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ‘‘ஒரு மாதத்திற்கு முன்பு மாநிலங்களவையில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அந்த பணத்திற்கு இதுவரை எந்த எம்பியும் உரிமை கோரிவரவில்லை. ஒருவேளை யாராவது தேவை காரணமாக அந்த பணத்தை கொண்டு வந்திருக்கலாம். ஆனால் நோட்டு கண்டெடுக்கப்பட்ட பிறகு அனைவருமே அது தங்களுடையது இல்லை என கூறுகின்றனர். இது மிகவும் வேதனை தருகிறது. இது மிகவும் தீவிரமான பிரச்னை. நமது உண்மைத்தன்மை, மதிப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கூட்டு சவால் இது’’ என்றார்.
The post மாநிலங்களவையில் கிடைத்த ரூபாய் நோட்டுக்கு யாரும் உரிமை கோராதது வேதனை: துணை ஜனாதிபதி பேச்சு appeared first on Dinakaran.