ஈரோடு: ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 5.2.2025 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்வடைந்தது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் இன்று மாலை 6 மணி முதல் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாலை 6 மணிக்கு பிறகு தேர்தல் தொடர்பான பரப்புரையோ, கூட்டமோ நடத்தக்கூடாது எனவும் தொலைக்காட்சி, சினிமா மற்றும் இதர வழிமுறைகளில் பிரச்சாரம் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்புதல், சமூக வலைதளங்கள் வாயிலாக பிரச்சாரம் மோற்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடகூடாது. மாலை 6 மணிக்குள் தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமண மண்டபம், சமூதாய நல கூடம், விடுதி, விருந்தினர் இல்லங்களில் வெளியாட்கள் இல்லாததை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வேட்பாளர்களுக்கு பிரச்சாரத்திற்கு வழங்கப்பட்ட வாகன அனுமதி இன்று மாலை 6 மணியோடு முடிவுக்கு வந்தது. வரும் 8ம் தேதி டெல்லி சட்டப் பேரவை தேர்தல் மற்றும் உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறும் 2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
The post பிப்.5ம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது appeared first on Dinakaran.