மாநில சிலம்ப போட்டி காஞ்சி மாவட்டம் முதலிடம்

2 months ago 10

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மாநில அளவிலான சிலம்ப போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட அணி முதலிடத்தை பிடித்து சம்பியன் பட்டத்தை வென்றது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களால் துவக்கப்பட்ட, மெட்ராஸ் இந்தியா மற்றும் தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கழகம் சார்பில், மாநில அளவிலான முதலாவது சிலம்பம் போட்டி நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு பல்நோக்கு உள் அரங்கில் நடந்தது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐந்து முதல் 20 வயதிற்கு உட்பட்ட, 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரியை சேர்ந்த சிலம்ப வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர். இதில், காஞ்சிபுரம் அணி தங்கப் பதக்கமும், புதுக்கோட்டை அணி வெள்ளி பதக்கமும், தர்மபுரி அணி வெண்கல பதக்கமும் வென்றன. பதக்கம் வென்ற வீரர்கள், 2025ல் நடைபெறும் தென் மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

The post மாநில சிலம்ப போட்டி காஞ்சி மாவட்டம் முதலிடம் appeared first on Dinakaran.

Read Entire Article