‘மாநில அரசுக்கு கட்டுப்பட்டே..’ - மோடியே சொல்லிவிட்டார் இனி ஆளுநர் என்ன செய்வார்? - அமைச்சர் ரகுபதி

3 months ago 11

சென்னை: “மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி?” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடிக்கு பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா? தமிழகத்தில் மோடி நியமித்திருக்கும் ஆளுநர் ரவியோ, தமிழக அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை.

Read Entire Article